ஆப்நகரம்

மேகலாயா, நாகலாந்து மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஐந்து மணிவுடன் நிறைவடைந்தது.

Samayam Tamil 27 Feb 2018, 7:01 pm
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஐந்து மணிவுடன் நிறைவடைந்தது.
Samayam Tamil northeast elections 2018 67 voter turnout in meghalaya 75 in nagaland
மேகலாயா, நாகலாந்து மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!


மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. 60 தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் வில்லியம் நகர் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜொனாதன் சங்மா பிரச்சாரத்தின் போது கொல்லப்பட்டதால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து மீதமுள்ள 59 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 372 வேட்பாளர்களும், 18 லட்சத்து 30 ஆயிரத்து 104 வாக்காளர்களும் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 3 ஆயிரத்து 82 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் வடக்கு அங்காமி-2 என்ற தொகுதியில் என்டிபிபி கட்சியின் தலைவர் நேபியு ரியோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மீதமுள்ள 59 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தொகுதிகளில் 195 வேட்பாளர்களும், 11 லட்சத்து 70 ஆயிரத்து 548 வாக்காளர்களும் உள்ளனர்.

67% voter turnout in #Meghalaya and 75% voter turnout recorded in #Nagaland till 5 pm #MeghalayaElection2018 #NagalandElection2018 #ElectionCommission pic.twitter.com/OoMkPQQiKB — Doordarshan News (@DDNewsLive) February 27, 2018 இரண்டு மாநிலங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் மேகாலாய மாநிலத்தில் 67 சதவீத வாக்குகளும், நாகலாந்தில் 75% சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களுடன், ஏற்கனவே வாக்குப்பதிவு நடந்த திரிபுராவிலும் வருகிற 3ஆம் தேதியன்று வாக்குஎண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்து.

அடுத்த செய்தி