ஆப்நகரம்

கோரக்பூரில் நடந்திருப்பது ‘படுகொலை’: ‘நோபல்’ கைலாஷ் காட்டம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள் அரசு மருத்துவனையில் 63 குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்திருப்பது ‘படுகொலை’ என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் குழந்தைகள் நல ஆர்வலருமான கைலாஷ் சத்தியார்த்தி விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 12 Aug 2017, 3:21 pm
கோரக்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள் அரசு மருத்துவனையில் 63 குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்திருப்பது ‘படுகொலை’ என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் குழந்தைகள் நல ஆர்வலருமான கைலாஷ் சத்தியார்த்தி விமர்சித்துள்ளார்.
Samayam Tamil not a tragedy its a massacre kailash satyarthi on gorakhpur hospital deaths
கோரக்பூரில் நடந்திருப்பது ‘படுகொலை’: ‘நோபல்’ கைலாஷ் காட்டம்


உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த பிஞ்சுக் குழந்தைகள் இறப்புக்குக் காரணம் மருத்துவமனையில் சிகிச்சைக்குத் தேவையான திரவ ஆக்சிஜன் இல்லாததே என்று தெரியவந்துள்ளது.

பல ஊடங்களில் இந்தச் சம்பவம் கடந்த இரண்டு நாட்களில் நடந்ததாக செய்தி வெளியாகும் நிலையில் கடந்த 5 நாட்களாகவே குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்திருப்பதை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.
30 kids died in hospital without oxygen. This is not a tragedy. It's a massacre. Is this what 70 years of freedom means for our children? — Kailash Satyarthi (@k_satyarthi) August 11, 2017 இதனிடையே, சிகிச்சைக்கான திரவ ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய ரூ.67 லட்சம் தொகை பாக்கி இருப்பதால், அந்நிறுவனம் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்திவிட்டது என்று தெரியவந்திருக்கிறது. இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் குழந்தைகள் நல ஆர்வலருமான கைலாஷ் சத்தியார்த்தி, “30 குழந்தைகள் சுவாசிக்க ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் இறந்துள்ளனர். இது வெறும் துயரச் சம்பவம் மட்டுல்ல. படுகொலை. எதிர்காலத்திலாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய உரிய முறையில் இது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.

அடுத்த செய்தி