ஆப்நகரம்

சுவரில் தாவிக் குதித்து சென்று சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்!!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

Samayam Tamil 21 Aug 2019, 10:49 pm
ஐ.என்.எக்ஸ் ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் காணவில்லை என்று சிபிஐ அமைப்பு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் இன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். பின்னர், அவரை சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
Samayam Tamil p chidambaram arrest


முன்னதாக டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசியதாவது: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என் மீது குற்றம்சாட்டவில்லை. என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

1947ம் ஆண்டு இந்தியாவுக்கு மிக முக்கியமான காலம். அதுதான் நம்முடைய சுதந்திரப் போராட்டம் முடிவுக்கு வந்த வருடம். சுதந்திரம் பெற வேண்டுமென்றால், கடுமையான போராட்டங்கள் இருக்கும். சுதந்திரம் பெறவும் போராடினோம், சுதந்திரம் காக்கவும் போராட வேண்டும். ஜனநாயகம், சுதந்திரம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் மீது வேண்டுமென்றே சிலர் பொய் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். சட்டத்திற்கு அஞ்சி நான் எங்கேயும் ஓடவில்லை'' என்று கூறினார்.

காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!

செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பிறகு ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அவரை பின்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால், அதற்குள்ளாக சிதம்பரம் வீட்டிற்குள் சென்றுவிட்டார். கதவை தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை.

இதனையடுத்து சிதம்பரத்தின் வீட்டு மதில்சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்ய சிபிஐ சென்றனர். சிறிது நேரத்தில் ப.சிதம்பரமே வெளியே வந்தார். உடனே அவரை சிபிஐ அதிகாரிகள் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் காவலில் வைக்கப்படுவார் என்று சிபிஐ வட்டாரங்கள் கூறுகிறது.

முதலில் பிழைகளை சரி செய்யுங்கள்; ப.சிதம்பரம் மனுவை அவசர மனுவாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
ஐஎன்எக்ஸ் வழக்கில் ப. சிதம்பரத்திற்கு சிபிஐ மீண்டும் சம்மன் வழங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட விசாரணைக்கான சம்மனை தொடர்ந்து ஆஜர் ஆகாததால் தற்போது சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை முன் ஜாமீன் கோரிய அவரது மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இன்று அவரது மனுவில் தவறு என்று எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, சிதம்பரத்தை கைது செய்யலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு முன்பு அவரது வீட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். அவரை கைது செய்யக் கூடாது என்று கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

சிதம்பரத்தை நாளை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்துகிறது. சிபிஐ விசாரணையை துவக்குவதற்கு முன்பு சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி