ஆப்நகரம்

விஜய் மல்லையா விவகாரம்: கைது வாரண்ட் பிறப்பித்தது ஐதராபாத் நீதிமன்றம்

நிதி மோசடி வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத கைது வாரண்ட் பிறப்பித்து, ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 13 Mar 2016, 3:38 pm
நிதி மோசடி வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத கைது வாரண்ட் பிறப்பித்து, ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil now vijay mallya has non bailable warrant against him in cheating case
விஜய் மல்லையா விவகாரம்: கைது வாரண்ட் பிறப்பித்தது ஐதராபாத் நீதிமன்றம்


ஜிஎம்ஆர் தொழில்குழுமம், ஒப்பந்த அடிப்படையில், நாடு முழுவதும் விமான கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஐதராபாத் பிரிவு சார்பில், தொழிலதிபர் விஜய் மல்லையா மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரூ.8 கோடி நிலுவைத் தொகையை கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அந்நிறுவனம் வழங்கிய ரூ.50 லட்சம் மதிப்புடைய காசோலைகள் போதிய பணம் இல்லாததால், திரும்பி வந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்மீது, விஜய் மல்லையா மற்றும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிதியதிகாரி ரகுநாத் ஆகியோரை கைது செய்யும்படி, அதில் கோரப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த ஐதராபாத் நீதிமன்றம், மார்ச் 10ம் தேதி அவர்கள் இருவரையும் வழக்கு விசாரணைக்கு, ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது. எனினும், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, விஜய் மல்லையா மற்றும் ரகுநாத் மீது ஜாமீனில் வெளிவர இயலாத கைது வாரண்ட் பிறப்பித்து, ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, மார்ச் 18ம் தேதி மும்பையில் அமலாக்கத்துறை முன்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி, விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது ஐதராபாத் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதை அடுத்து, விஜய் மல்லையா மீதான பிடி மேலும் இறுகியுள்ளது.

அடுத்த செய்தி