ஆப்நகரம்

இந்தியா முழுக்க என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும்... மத்திய அமைச்சர் அமித்ஷா

தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ஏறக்குறைய சுமார் 19 ​​லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இதில் இந்திய ராணுவ வீஇரர்கள் அரசுப்பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர். இந்நிலையில் நாடு முழுக்க இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Nov 2019, 5:00 pm
இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாநிலங்களவையில் அறிவித்து இருக்கிறார்.
Samayam Tamil amit shah


இந்தியர் என்பதை தனது குடியுரிமை ஆவணங்களுடன் நிரூபிக்கும் அனைவரும் இந்தியர்கள் என்றும், ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள் இந்தியர்கள் அல்லாதவர்கள் என்று கருதப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை கண்டு இந்தியாவில் உள்ள இந்தியர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் உறுதியளித்து உள்ளார்.



அதென்ன தேசிய குடிமக்கள் பதிவேடு?

என்.ஆர்.சி. (National Register of Citizenship) எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, முதன் முதலாக க்காக முதலில் அசாம் மாநிலத்தில் 1951 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதாவது, இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களையும் , அண்டை நாட்டுப்பகுதிகளிலிருந்து வந்தவர்களையும் பிரித்தறியும் நோக்கில் இந்த கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.

பாகிஸ்தான் பிரிவினை நடந்து முடிந்து சில காலங்களே ஆகியிருந்த நிலையில், அஸ்ஸாம் ஒரு இந்து மாநிலம் என்ற நிலை மாறிவிடுமோ என்று அப்போதைய தேசியவாதக் குழுக்கள் கருதின. இதனால் இந்த கணக்கெடுப்பு தேவைப்பட்டது



அதன்பிறகு 1971 இலும் இதன் தேவை ஏற்பட்டது. (வங்கப்பிரிவினைக்கு பிறகு) . போருக்கு பிறகு அசாம் வந்தவர்களில் பெரும்பாலானோர்கள் அங்கேயே தங்கினர்.



இதனைத் தொடர்ந்து 1979 காலகட்டத்தில் மாணவர் அமைப்புகள் போராட்டங்களைத் தொடங்கின. அதாவது சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் இந்திய குடிமக்கள் அல்ல என்ற கோரிக்கையை முன்வைத்து அந்த போராட்டங்கள் நடந்தன. இதன் விளைவாக நடந்த வன்முறையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.

இறுதியாக 1985ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.அதன்படி, 1971 மார்ச் 24ஆம் தேதியன்று, அசாமில் வாழ்ந்ததை ஆவணங்களுடன் நிரூபிக்க முடியாதார்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்போவதாக இந்திய அரசு அறிவித்தது.

அதற்காகத் தொடங்கிய கணக்கெடுப்பு முறைதான் இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு.

தற்போது என்ன?



இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ஏறக்குறைய சுமார் 19 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இதில் இந்திய ராணுவ வீஇரர்கள் அரசுப்பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர்.

மத அடைப்படையில் இந்த கணக்கெடுப்பு நடப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். விடுபட்டவர்கள் தங்களுக்கான தீர்ப்ப்பயத்தில் நியாயம் கேட்டு முறையீடு செய்தனர். இதே முறையை மேற்கு வங்கத்திலும் நடைமுறைப்படுத்தப் போவதாக அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இதனை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கடுமையாக எதிர்த்தார்.



இந்நிலையில், தற்போது இந்தியா முழுக்க இந்த என்.ஆர்.சி கணக்கெடுப்பு நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் கூடுதலாக தேசிய குடிமக்கள் பதிவேடும், குடியுரிமை திருத்த மசோதாவும் வேறு வேறு என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இன்று மேலவையில் இதனைத் தெரிவித்த அமித்ஷா, இந்த என்.ஆர்.சியில் எந்த விதமான மதப்பாகுபாடுகளும் இல்லை என்பதற்கும் உறுதியளிக்கும் விதமாக பேசினார்.

அடுத்த செய்தி