நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக இரண்டு விதமான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அவை பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகும். இந்த இரண்டு தடுப்பூசிகளையும் 2 டோஸ்களாக செலுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் தடுப்பூசிக்கான தற்போது தேவை அதிகரித்துள்ளது. ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டோரில் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். சிலர் முதல் டோஸ் போட்டுக் கொண்டு இரண்டாவது டோஸிற்காக காத்திருக்கின்றனர். அதற்குள் 18 வயது முதல் 44 வயது வரையிலான மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் போதிய இருப்பு இல்லாததால் இந்த திட்டத்தை பல்வேறு மாநில அரசுகளும் ஒத்தி வைத்திருக்கின்றன. மேலும் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளில் இரண்டாவது டோஸிற்காக காத்திருக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன.
இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வதற்கான கால அவகாசத்தை 12 முதல் 16 வாரங்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு தடுப்பூசி பயன்பாட்டை நிர்வகிக்கும் தேசிய நிபுணர் குழுவிற்கு மத்திய அரசின் நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) பரிந்துரை செய்துள்ளது.
தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் போடுவதற்கான கால அவகாசம் 4 முதல் 8 வாரங்களாக இருக்கிறது. மேலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்கான உரிய ஆய்வுகளை மேற்கொண்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கட்டுப்பாடுகளும், முழு ஊரடங்கும்; மாநில வாரியாக லிஸ்ட்!
கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசியின் 2வது டோஸிற்கான கால அவகாசத்தில் எந்தவொரு நீட்டிப்பையும் செய்ய வலியுறுத்தப்படவில்லை.
இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வதற்கான கால அவகாசத்தை 12 முதல் 16 வாரங்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு தடுப்பூசி பயன்பாட்டை நிர்வகிக்கும் தேசிய நிபுணர் குழுவிற்கு மத்திய அரசின் நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) பரிந்துரை செய்துள்ளது.
தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் போடுவதற்கான கால அவகாசம் 4 முதல் 8 வாரங்களாக இருக்கிறது. மேலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்கான உரிய ஆய்வுகளை மேற்கொண்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கட்டுப்பாடுகளும், முழு ஊரடங்கும்; மாநில வாரியாக லிஸ்ட்!
கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசியின் 2வது டோஸிற்கான கால அவகாசத்தில் எந்தவொரு நீட்டிப்பையும் செய்ய வலியுறுத்தப்படவில்லை.