ஆப்நகரம்

பெங்களூரு: வாக்கிங் போக பூங்கா வாசலில் கூடிய கூட்டம்

பெங்களூருவில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் கப்பன் பூங்கா ஆகிய பூங்காக்களில்​​ காலை நடைபயிற்சிக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

Samayam Tamil 19 May 2020, 10:57 am
4ஆம் கட்ட ஊரடங்கு ஏராளமான புதிய தளர்வுகளுடன் வெளிவந்திருக்கும் நிலையில், காலை நடைபயிற்சி செய்வதற்காக் பூங்காக்களை நோக்கி படையெடுத்து உள்ளனர் நகரவாசிகள்.
Samayam Tamil number of morning walkers taking entry parks open today
பெங்களூரு: வாக்கிங் போக பூங்கா வாசலில் கூடிய கூட்டம்


இந்தியாவில் கோவிட் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ஆம்தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், மே மாதம் 18ஆம் தேதி முதல் நான்காம் கட்ட பொது முடக்கம் அமலுக்கு வந்தது. இந்த 4ஆம் கட்ட பொதுமுடக்கத்தில் ஏற்கனவே இருந்த தளர்வுகளுடன் சேர்த்து கூடுதலாக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வெளியில் வருவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனப் போக்குவரத்தும் அதிகரித்தது.

சேலத்தில் போராடிய வடமாநிலத் தொழிலாளர்கள் விரட்டியடிப்பு



இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் கப்பன் பூங்கா ஆகிய பூங்காக்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை நடைபயிற்சிக்கு பூங்காக்கள் உகந்த இடமாக இருப்பதால் இப்படி கூட்டம் அதிகரித்திருப்பதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி