ஆப்நகரம்

முதல் மரணம்: மேற்பார்வையிட்ட நர்ஸுக்கு கொரோனாவா?

ஐதராபாத் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த நபருக்கு சிகிச்சை மேற்பார்வை செய்த நர்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Samayam Tamil 13 Mar 2020, 7:12 pm
கொரோனாவின் கோர முகத்தால் உலக அளவில் 138,600 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் 88 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்புகள் நேராமல் இருந்த நிலையில் ஒருவர் மரணடைந்ததாக கர்நாடக அரசு நேற்று உறுதி செய்தது.
Samayam Tamil கொரோனாவால் முதல் மரணம் மேற்பார்வையிட்ட நர்ஸுக்கு உடல் நிலை பாதிப்பு


யார் அவர்?

கார்நாடக மாநிலம் கல்புர்க்கியைச் சேர்ந்த முகமது ஹுசேன் சித்திக் (76) என்ற முதியவர் உடல்நிலை குறைவு காரணமாக கல்புர்க்கியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து ஐதராபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மார்ச் 10ம் தேதி உயிரிழந்தார். முன்னதாக கொரோனா அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகித்த மருத்துவர்கள் ஹுசேன் சித்திக் உடைய ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பதி: பக்தர்களுக்கு கொரோனா செக் அப்!

அந்த ஆய்வில் அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டது. ஐதராபாத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்தபோது அவரை மேற்பார்வையிட்ட நர்ஸ் திடீரென உடல்நல குறைவால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய ரத்த மாதிரிகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி