ஆப்நகரம்

ஜுலை 25-ல் இந்தியாவின் முதல் குடிமகன் ஆகிறார் ராம்நாத் கோவிந்த்

நாட்டின் 14ஆவது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் வரும் ஜூலை 25ஆம் தேதி காலை பதவியேற்கிறார் .

TNN 21 Jul 2017, 8:37 pm
நாட்டின் 14ஆவது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் வரும் ஜூலை 25ஆம் தேதி காலை பதவியேற்கிறார் .
Samayam Tamil oath taking ceremony of ramnath kovind
ஜுலை 25-ல் இந்தியாவின் முதல் குடிமகன் ஆகிறார் ராம்நாத் கோவிந்த்


குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து கடந்த 17ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக போட்டியிட்டார். அதேபோல் எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமார் நிறுத்தப்பட்டார். இதற்கான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைப்பெற்றது.

ஒட்டுமொத்தமாக ராம்நாத் கோவிந்த் 7,02,044 மதிப்புள்ள 2930 வாக்குகளும், மீராகுமார் 3,67,314 மதிப்புள்ள 1,844 வாக்குகளும் பெற்றனர். இதனால் ராம்நாத் கோவிந்த் 65.65% வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மீராகுமார் 34.35% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் ஜூலை 25ஆம் தேதி காலை பதவியேற்க உள்ளார். ராம்நாத் கோவிந்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் .குடியரசு தலைவர் மாளிகையில் அவருக்கு இடைக்கால அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது . ராம்நாத் கோவிந்துக்கான பாதுகாப்புப் பணியை குடியரசு தலைவரின் பாதுகாவலர்கள் ஏற்றுள்ளனர்

அடுத்த செய்தி