ஆப்நகரம்

ஊட்டச்சத்து இல்லாததால் இந்தியாவில் 50% பெண்களுக்கு ரத்தசோகை!

சரியான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினால், இந்தியாவில் உள்ள 50 சதவீத பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதாக சர்வதேச ஆய்வு அறிக்கை தெரிவிதித்துள்ளது.

TNN 8 Nov 2017, 11:39 pm
To read this story in English, Clik Here
Samayam Tamil obesity a bigger threat to world health than malnutrition global nutrition report 2017
ஊட்டச்சத்து இல்லாததால் இந்தியாவில் 50% பெண்களுக்கு ரத்தசோகை!


சரியான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினால், இந்தியாவில் உள்ள 50 சதவீத பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதாக சர்வதேச ஆய்வு அறிக்கை தெரிவிதித்துள்ளது.

குளோபல் நியூட்ரிஷன் ரிப்போர்ட் (Global Nutrition Report - 2017) எனும் சர்வதேச அளவிலான ஊட்டச்சத்து குறைபாடு குறித்த ஆய்வு அறிக்கை, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் உள்ள பெண்களில் 50 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பதின்பருவ பெண்களில் 22 சதவீதம் பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 38 சதவீதம் பேருக்கு அவர்களுடை சரியான வயதிற்குரிய வளர்ச்சி இல்லாமல், குள்ளமாக இருப்பதாகவும், 21 சதவீதம் பேர், உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி