ஆப்நகரம்

சுற்றுலா தளங்கள் திறப்பு: ஹேப்பி நியூஸ் சொன்ன மாநில அரசு!

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்படும் சூழலில் சுற்றுலா தளங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Sep 2020, 6:41 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து வருவதால் மாநில அரசுகள் தங்களின் சூழலுக்கு ஏற்ப தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் சுற்றுலா தளங்கள் திறப்பு குறித்து முக்கிய எடுக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுலா தினம் 2020 ஒட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் ஒடிசா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜே.பி.பனிகிராஹி நேற்று கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் மிகப்பெரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம். இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உரிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வரும் அக்டோபர் மாதம் முதல் சுற்றுலா தளங்களை திறக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். ஆனால் எந்த தேதியில் இருந்து என அமைச்சர் குறிப்பிடவில்லை.
Samayam Tamil Odisha Tourism


ஒடிசாவின் சுற்றுலா தளங்களுக்கு சாலை மார்க்கமாக பொதுமக்களை வரவேற்கும் விதமாக "Odisha By Road" என்ற திட்டத்தை முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்துள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் சூழலியல் சுற்றுலா முகாம்கள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார். நடப்பாண்டின் உலக சுற்றுலா தினம் 2020ன் கருப்பொருள் “சுற்றுலாவும், கிராமப்புற மேம்பாடும்” ஆகும்.

இதுதொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ‘நிமன்ட்ரான்’ உணவகங்களை திறந்து வைத்தார். இது ஒடிசா மாநிலத்தின் பிரத்யேக உணவு வகைகளை பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்குகிறது. இந்த உணவகங்கள் ஒடிசா சுற்றுலா மேலாண்மை கார்ப்பரேஷனின் கீழ் செயல்படும்.

கலாசார குழுவை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு?

புவனேஸ்வர், பூரி, சாம்பல்பூர் ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக ‘நிமன்ட்ரான்’ உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் புவனேஸ்வர் மற்றும் பூரி நகரும் மொபைல் உணவகங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் நவீன் பட்நாயக், நாங்கள் சுற்றுலா துறையின் கதவுகளை திறக்கவுள்ளோம்.

எனவே அனைத்து சுற்றுலா பயணிகளையும் ஒடிசாவிற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இங்கு பாதுகாப்பான, மன நிறைவான, சௌகரியமான அனுபவத்தை பெறுவீர்கள். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி