ஆப்நகரம்

அமைச்சரின் காலணியை சரிசெய்த பாதுகாவலர்!

ஒடிஷா அமைச்சர் யோகேந்திர பெஹ்ராவின் காலணியை பல பேர் முன்னிலையில் அவரது பாதுகாவலர் சரி செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 16 Aug 2016, 11:02 am
ஒடிஷா அமைச்சர் யோகேந்திர பெஹ்ராவின் காலணியை பல பேர் முன்னிலையில் அவரது பாதுகாவலர் சரி செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil odisha minister makes security officer sandal straps
அமைச்சரின் காலணியை சரிசெய்த பாதுகாவலர்!


ஒடிஷா மாநிலம் பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த யோகேந்திர பெஹ்ரா சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சராக உள்ளார். கியோன்ஜர் மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கொடியேற்றிவிட்டு வரும் போது தனது பாதுகாவலரை அழைத்து தன் காலணிகளை சரிசெய்ய கேட்டுக்கொண்டுள்ளார். ஏராளமான மக்கள், ஊடகங்கள் முன்னிலையில் பாதுகாவலர் கீழே குனிந்து அமைச்சரின் காலணியை சரிசெய்துள்ளார். இந்நிகழ்வு எல்லோர் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வு குறித்து கேட்டதற்கு, தான் ஒரு விஐபி என்றும், கொடியேற்ற வந்த எனக்கு அவ்வாறு அவர் செய்தது தவறில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ மற்றும் ஃபோட்டோ ஊடகத்தில் வெளியாகவே, தனது முட்டியில் வலி உள்ளதாகவும், அதனாலே பாதுகாவலர் தனக்கு உதவியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் சஜ்ஜன் ஷர்மா ஒடிஷா முதல்வர் நவீன் பட்னாக்கின் நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.

அடுத்த செய்தி