ஆப்நகரம்

புறா மூலம் சேதி சொல்லும் ஒடிசா போலீஸ்

ஒடிசா மாநில போலீசார் புறாக்கள் மூலம் செய்திகளை அனுப்பும் பாரம்பரிய முறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.

Samayam Tamil 17 Apr 2018, 9:49 pm
ஒடிசா மாநில போலீசார் புறாக்கள் மூலம் செய்திகளை அனுப்பும் பாரம்பரிய முறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.
Samayam Tamil 30705504_1676511482428436_2435029204501266432_n


ஓடிசாவில் உள்ள மலைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருக்கும் போலீஸ் நிலையங்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், இந்தப் புறாக்கள் மூலம் தகவல்களை அனுப்பிப் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இந்தச் சேவைக்காக தற்போது 50 புறாக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை (INTACH) மூலம் காவல் நிலையத்திலேயே புறாக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முறையில் செய்தி அனுப்ப, புறாக்களின் காலில் சிறு குப்பிகள் கட்டப்படும். அதில் காகிதத்தில் தேவையான செய்தியை எழுதி அனுப்புகின்றனர்.

25 கி.மீ தொலைவை 15 முதல் 20 நிமிடங்களுக்குள் சென்று அடைந்து விடுகின்றன இந்தப் புறாக்கள். இந்த முறை நாட்டிலேயே ஒடிசாவில் மட்டுமே இருக்கிறது.

மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் இந்தப் புறாக்கள் சேவைப் பயன்படுகிறது என்றும் ஒரிசா போலீசார் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி