ஒடிசாவில் கொரோனா அறிகுறிகளுடன் காணப்படுபவர்களை 14 நாள் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களில் வைத்துக் கண்காணித்து வந்த சூழலில், அதை 28 நாட்களாக அம்மாநில அரசு மாற்றியுள்ளது.
கொரோனா அறிகுறிகள் 21 நாட்கள் கழித்துத்தான் வெளியே தெரியும் எனக் கண்டறியப்பட்டுள்ளதால், இதை உணர்ந்து ஒடிசா அரசு தனிமைப்படுத்தும் மையங்களில் 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தனிமைப்படுத்தும் மையங்களில் 21 நாட்கள் வைக்கப்படும் அந்த நபர்கள், வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே வேளையில் தனிமைப்படுத்தும் மையங்களில் மாநில அரசு கேமிராக்களை வைத்து உடல் ரீதியான இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது.
அதேபோல் ஒடிசாவில் தனிமைப்படுத்தும் மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கை பெருமளவில் கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் என மருத்துவ வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விஏஓவை தாக்கிய ராணுவ வீரர்: குடிபோதையில் நிகழ்ந்த விபரீதம்!!
இதற்கிடையே வெளிமாநிலங்களிலிருந்து ஒடிசா திரும்புபவர்களுக்கு பிசிஆர் சோதனை செய்ய வேண்டும் என ஒடிசா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக இதுவரை மாநிலம் திரும்பிய 46 ஆயிரத்து 383 பேர் தனிமைப்படுத்தும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா அறிகுறிகள் 21 நாட்கள் கழித்துத்தான் வெளியே தெரியும் எனக் கண்டறியப்பட்டுள்ளதால், இதை உணர்ந்து ஒடிசா அரசு தனிமைப்படுத்தும் மையங்களில் 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தனிமைப்படுத்தும் மையங்களில் 21 நாட்கள் வைக்கப்படும் அந்த நபர்கள், வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே வேளையில் தனிமைப்படுத்தும் மையங்களில் மாநில அரசு கேமிராக்களை வைத்து உடல் ரீதியான இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது.
அதேபோல் ஒடிசாவில் தனிமைப்படுத்தும் மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கை பெருமளவில் கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் என மருத்துவ வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விஏஓவை தாக்கிய ராணுவ வீரர்: குடிபோதையில் நிகழ்ந்த விபரீதம்!!
இதற்கிடையே வெளிமாநிலங்களிலிருந்து ஒடிசா திரும்புபவர்களுக்கு பிசிஆர் சோதனை செய்ய வேண்டும் என ஒடிசா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக இதுவரை மாநிலம் திரும்பிய 46 ஆயிரத்து 383 பேர் தனிமைப்படுத்தும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.