ஆப்நகரம்

ஏரியில் தவறி விழுந்த முதியவர்... 15 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட அதிசயம்!!

ஏரியில் கால் தவறி விழுந்த முதியவர், 15 மணிநேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட வியப்பான சம்பவம் நெல்லூர் அருகே நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 5 Jul 2020, 9:51 pm
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பொதலக்கூரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பா ரெட்டி(62). சனிக்கிழமை மாலை (ஜூலை 4) இவர், அருகிலுள்ள ஊரான சங்கம் கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
Samayam Tamil lake


தனத நடைப்பயணத்தில் ஏரி ஒன்றை சுப்பா ரெட்டி கடக்க வேண்டியிருந்தது. தனி ஆளாய் ஏரியை கடக்க முயன்றபோது, கால் தவறி அவர் ஏரியில் விழுந்துவிட்டார்.

இந்தச் சம்பவம் மாலை நேரத்தில் நடைபெற்றது என்பதால், பொழுது போகப் போக, அந்தப் பக்கம் யாரும் வரவில்லை. ஆனாலும் சுப்பா ரெட்டி நம்பிக்கை இழக்கவில்லை. இரவு தொடங்கி விடிய விடிய ஏரியில் இருந்த மரம் ஒன்றின் கிளையைப் பிடித்துக் கொண்டு, உதவிக்காக யாராவது வருவார்களா என்று அவர் காத்து கொண்டிருந்தார்.

ஐ.ஏ.எஸ். கனவுடன் பள்ளிக்கு சைக்கிள் பயணம்: சாதித்த 10ஆம் வகுப்பு மாணவி!

இந்த நிலையில், இன்று காலை(ஜூலை 5) 10 மணி அளவில் அந்த வழியாக ஆடு மேய்ப்பதற்காக சென்று கொண்டிருந்த சங்கம் கிராமத்தை சேர்ந்த சிலர், சுப்பா ரெட்டி தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே கிராமத்துக்கு மக்கள் அனைவரும் ஒன்றுகூட, அவர்களில் சிலர் ஏரிக்குள் இறங்கி சுப்பா ரெட்டியை மீட்டனர்.

ஏரிக்குள் தவறி விழுந்து, 15 மணி நேரத்துக்கு பின் மீண்ட முதியவர் மறுவாழ்வு பெற்றதாகவே அவரது குடும்பத்தினர் வியப்புடன் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி