ஆப்நகரம்

வீடு இல்லாதவர்களை பழைய ரயில் பெட்டியில் தங்க வைக்கும் திட்டம்!

வீடு இல்லாமல் சாலை ஓரங்களில் வசிப்பவர்கள் தங்குவதற்கு பழைய ரயில் பெட்டிகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

TNN 28 Oct 2017, 3:42 pm
மும்பை: வீடு இல்லாமல் சாலை ஓரங்களில் வசிப்பவர்கள் தங்குவதற்கு பழைய ரயில் பெட்டிகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
Samayam Tamil old train coaches to be used as homeless shelters
வீடு இல்லாதவர்களை பழைய ரயில் பெட்டியில் தங்க வைக்கும் திட்டம்!


இந்தியாவில் 10 லட்சம் பேர் வசிப்பதற்கு சிறிய குடிசை கூட இல்லாமல் இருக்கின்றனர். கடந்த, 2010ஆம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடு இல்லாதவர்கள் உள்ள 62 நகரங்களில் இரவு நேரங்களிலாவது அவர்கள் தங்குவதற்கு இடமளிக்க வேண்டும் என்று அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பழைய ரயில் பெட்டிகளில் வீடில்லாதவர்களை தங்கவைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மின் இணைப்பு, கழிப்பறை போன்ற வசதிகளை அவற்றில் ஏற்படுத்தவும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.

இருப்பினும், ரயில் பெட்டிகளை நிறுத்துவதற்கு போதிய வசதியான இடம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

மத்திய அரசின் இத்திட்டத்திற்கு 10 பழைய ரயில் பெட்டிகளை வழங்குவதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி