ஆப்நகரம்

அயோத்தியில் ராமர் கோயில் வேண்டி கால் நூற்றாண்டுக்கு மேலாக விரதம் இருக்கும் மூதாட்டி!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக, கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக விநோதமான முறையில் விரதம் மேற்கொண்டுவரும் மூதாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Samayam Tamil 4 Aug 2020, 12:24 am
மத்தியப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி. 82 வயதான இவர் சமஸ்கிருத மொழி ஆசிரியையாக இருந்து ஓய்வுபெற்றவர். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டி, கடந்த 28 ஆண்டுகளாக, பால், பழம் மட்டும உணவாக உண்டு, விரதம் மேற்கொண்டு வருகிறார்.
Samayam Tamil old lady


இந்த நிலையில் நாளை (ஆகஸ்ட் 5) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இதையடுத்து தமது நீண்டகால விருப்பம் நிறைவேறயுள்ளதாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் ஊர்மிளா சதுர்வேதி.

அதேசமயம், தாம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இதே விரதத்தை தொடரப்போவதாகவும், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த பின்னரே விரதத்தை முடித்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: முக்கிய தலைவர்கள் ஆப்சண்ட்; செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது!

இதுகுறித்து அவரது மகன் கூறும்போது, " வயதான காலத்தில் எனது தாய் மேற்கொள்ளும் விரதத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுவிடுமோ மிகவும் கவலைப்படுகிறேன்.

விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் கோயில் கட்டப்படவில்லை என்று பலமுறை எடுத்து கூறிவிட்டோம். ஆனால் அவர் எங்கள் பேச்சை கேட்பதாக தெரியவில்லை. எனவே, அவரின் விருப்பப்படியே விட்டுவிட்டோம்" என்றார் அவர்.

அடுத்த செய்தி