ஆப்நகரம்

ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நடந்த அதிரடி- பதற்றத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்!

அடுத்தடுத்து பரபரப்புகள் அரங்கேறி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 5 Aug 2019, 10:57 am
ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சட்டப்பிரிவு 35ஏ மாநில மக்களுக்கு நிரந்தர குடியுரிமை, வெளிமாநிலத்தவர்கள் குடியுரிமை பெற தடை, அசையா சொத்துகள் வாங்க தடை, அரசு வேலைவாய்ப்புகள், ஊக்கத்தொகை பெறுவதில் மாநில மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை உள்ளிட்ட சலுகைகள் அளித்து வருகிறது.
Samayam Tamil Omar Abdullah


இதேபோல் சட்டப்பிரிவு 370ம் அம்மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இவற்றை மத்திய அரசு ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் பரவின. இதையடுத்து அங்கு வரலாற்றில் இல்லாத அளவு ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: காஷ்மீர் விவகாரம் - லைவ் அப்டேட்ஸ்...!

மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஜம்முவில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நேற்று நள்ளிரவு முதல் காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் சஜத் லோன் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Also Read: 35A in Kashmir: ஜம்மு காஷ்மீர் பதட்டத்திற்கு இதுதான் காரணமா?

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள உமர் அப்துல்லா, நள்ளிரவு முதல் நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். பிற முக்கிய தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

இதனை நம்ப முடியவில்லை. அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவார். எல்லோரும் அமைதி காக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பேசிய ஆளுநர் சத்ய பால் மாலிக், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

எது நடந்தாலும், அது ரகசியமாக நடைபெறாது. எதுவாக இருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு வரும். அங்கு விவாதிக்கப்படும். அடுத்த சில நாட்கள் வரை காத்திருக்கவும் என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

Also Read: பதற்றத்தின் பிடியில் காஷ்மீர்; அதிரடியாக களமிறக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

அடுத்த செய்தி