ஆப்நகரம்

இந்தியாவில் கால்தடம் பதித்தது ஒமைக்ரான்: இரண்டு பேருக்கு தொற்று உறுதி!

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Samayam Tamil 2 Dec 2021, 7:42 pm

ஹைலைட்ஸ்:

  • தொடர்பில் இருந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது
  • பெங்களூருவை சேர்ந்த 46 வயதுடைய மற்றொரு நபருக்கும் ஒமைக்ரான் வைரஸ்
  • தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு நகருக்கு வந்தவருக்கு ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஒமைக்ரான்
ஒமைக்ரான்
தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள புதிய வகை பி.1.1.529 ஒமைக்ரான் வைரஸ் பெரும்கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய வகை வைரஸுக்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் குறைவான செயல் திறனைத் தான் கொண்டிருக்கும் எனவும், இதன் பரவல் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமைக்ரான் 5 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது எனவும் கூறப்படுகிறது.
ஒமைக்ரான் பரவலை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் கண்காணிப்பையும், கட்டுப்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் 20 ஆம் தேதி தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் வியாபார நிமித்தமாக பெங்களூரு நகருக்கு வருகை தந்துள்ளனர். விமான நிலையத்தில் இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வந்ததால் இருவரது மாதிரிகளை கர்நாடகா சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை: அரசு திடீர் முடிவு!

ஒமைக்ரான்


அதில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு நகருக்கு வந்த 66 வயதுடைய அவருக்கு ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பெங்களூருவை சேர்ந்த 46 வயதுடைய மற்றொரு நபருக்கும் ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி