ஆப்நகரம்

சட்டசபைக்கு வராமல் கட் அடிக்கும் எம்எல்ஏ..க்கள்!

கர்நநாடகாவில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் பல உறுப்பினர்கள் வராமல் இருப்பதால், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே காட்சியளிக்கின்றன.

TNN 20 Nov 2017, 3:08 pm
கர்நநாடகாவில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் பல உறுப்பினர்கள் வராமல் இருப்பதால், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே காட்சியளிக்கின்றன.
Samayam Tamil on day 6 only 39 mlas turn up in karnataka assembly
சட்டசபைக்கு வராமல் கட் அடிக்கும் எம்எல்ஏ..க்கள்!


கர்நாடகா மாநிலத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி துவங்கிய இந்த கூட்டத்தொடர், வரும் 24ம் தேதி முடிவடைகிறது.

இந்த கூட்டத்தொடரில் பெரும்பாலான சட்டசபை உறுப்பினர்கள், கலந்து கொள்ளாமல், கட் அடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசியல் கட்சி கூட்டம், பொதுக்கூட்டங்களில் மக்கள், தொண்டர்கள் இல்லாமலே தலைவர்கள் பேசி வரும் நிகழ்வு கடந்த சில வருடங்களாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

தற்போது அதே போலவே, சட்டசபையிலும் கூட்டம் இல்லாமல், உரையாற்றி வருவது, யாருமே இல்லாத கடையில யாருக்கப்பா டீ ஆத்துற, என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அடுத்த செய்தி