ஆப்நகரம்

’தூய்மையே சேவை’ திட்டத்தின் தொடக்கம்; டெல்லி பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்த பிரதமர்!

புதிய தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிக்கூடம் ஒன்றில் பிரதமர் மோடி சுத்தம் செய்தார்.

Samayam Tamil 15 Sep 2018, 2:21 pm
புதுடெல்லி: புதிய தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிக்கூடம் ஒன்றில் பிரதமர் மோடி சுத்தம் செய்தார்.
Samayam Tamil PM Modi.


’தூய்மையே சேவை’ திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் தூய்மைப் பணியில் இணைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

4.5 லட்சம் கிராமங்கள் திறந்த வெளிக் கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களாக மாறியுள்ளன. இந்த தூய்மையே சேவை திட்டம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி வரை தொடரும்.

நமது தேசப்பிதா காந்தியின் கனவை நிறைவேற்றுவதில் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றார். இதற்கிடையில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசினார்.

மேலும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அமிதாப் பச்சன், ரத்தன் டாட்டா ஆகியோரிடமும் பேசினார். கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் தூய்மை 40%ல் இருந்து 90%ஆக அதிகரித்துள்ளது.

புதிய தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில் பாகர்கஞ்ச் பகுதியில் உள்ள பாபா சாகிப் அம்பேத்கர் மேல்நிலைப்பள்ளியில் தூய்மைப் பணிகளை பிரதமர் மோடி மேற்கொண்டார்.

On 'Swachhata Hi Seva' launch, PM Modi sweeps premises of Delhi school.

அடுத்த செய்தி