ஆப்நகரம்

Kerala Floods: ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து- கேரளா அரசு அறிவிப்பு

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 14 Aug 2018, 3:54 pm
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil kerala2332-1534236257
கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்தது அரசு


கேரளாவில் கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கடும் மழை பெய்து வருகிறது. இதுவரை ஏற்பட்ட நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இடுக்கி அணை திறக்கப்பட்டதால், அம்மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்றிரவு முதல் மீண்டும் மழை பெய்து வருவதால் கேரளா மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்து வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் உண்ண உணவு, குடிக்க குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவின் பிரசித்த பெற்ற ஓணம் பண்டிகை இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் பினராயி விஜயன், வீடு, உடமைகளை இழந்து மக்கள் தவித்து வரும் நிலையில் ஓணம் பண்டிகையை வழக்கம் போல அரசு கொண்டாடுவது பொருத்தம் கிடையாது.

இந்தாண்டிற்கு அரசு சார்பில் நடக்கும் அனைத்து ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, கேரளாவில் இயல்பு நிலை திரும்பு என பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த செய்தி