ஆப்நகரம்

ரூ.1000 பரிசுத்தொகை அறிவிப்பு: பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த அரசு..!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பரிசு தொகையை கேரளா முதல்வர் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Aug 2021, 3:54 pm
கேரளாவில் வருடா வருடம் ஓணம் பண்டிகையை அம்மாநில மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த பிரத்யேக பண்டிகையை சாதி, மதம் என வேறுபாடு காட்டாமல் மக்கள் சந்தோஷமாக கொண்டாடி வரும் பொருட்டு அரசு பல சலுகைகளை வழங்கும்.
Samayam Tamil file pic


இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் பொது மக்களின் பொருளாதார நெருக்கடியை கருத்தில்கொண்டு ஓணம் பண்டிகையை வழக்கமாக கொண்டாடும் வகையில் நிறைய சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுமார் 48.5 லட்சம் பேருக்கு தலா ரூ .3,100 நல ஓய்வூதியமாக அரசு வழங்கியுள்ளது. அதற்காக ரூ. 1481.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

மேலும், பல்வேறு நலத்திட்ட ஓய்வூதிய திட்டங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு தலா ரூ .1000 ஓணம் சிறப்பு பரிசு தொகையையும் 60 வயது முழுமையடைந்த பட்டியிலனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தலா 1000. ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க 576 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு; திருப்பதியில் இன்றே கடைசி!

அதுபோல, கொரோனாவால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள சிறு வணிகர்களுக்கு மாநில அரசு ரூ .5650 கோடி உணவு தொகுப்பையும் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி