ஆப்நகரம்

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் மேலும் நீட்டிப்பு- டெல்லி சிறப்பு நீதிமன்றம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் சிபிஐ காவலை நீட்டித்து, டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 2 Sep 2019, 6:14 pm
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். இந்த சூழலில் கடந்த 2007ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூ.305 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Samayam Tamil P Chidambaram


இதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

ப்ளீஸ் ஜெயில் வேண்டாமே; உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு வாதம்!

இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதன் விசாரணையில் கடந்த 21ஆம் தேதி, ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.

இதையடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தரப்பு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

குட் நியூஸ் - சந்திராயன் 2 : நிலவை ஆராயும் லேண்டர் ''விக்ரம்'' பிரியும் பணி தொடக்கம்

அதில், ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை சிபிஐ காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே ப.சிதம்பரத்தை வரும் 5ஆம் தேதி வரை, திகார் சிறையில் அடைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மிஸ்ஸான வெட்டுருவா மீசை; க்யூட்டா வந்து மாஸ் காட்டிய அபிநந்தன் - மீண்டும் போர் விமானத்தை இயக்கி அசத்தல்!

அடுத்த செய்தி