ஆப்நகரம்

டெல்லியில் சாலையோரம் உறங்கியவர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் பலி; 3 பேர் காயம்

தலைநகர் டெல்லியில் சாலையோரம் உறங்கிய நபர்கள் மீது, டீன் ஏஜ் சிறுவன் கார் ஏற்றியதில், ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

TNN 20 Apr 2017, 10:42 am
தலைநகர் டெல்லியில் சாலையோரம் உறங்கிய நபர்கள் மீது, டீன் ஏஜ் சிறுவன் கார் ஏற்றியதில், ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
Samayam Tamil one dead three injured in accident near kashmere gate isbt
டெல்லியில் சாலையோரம் உறங்கியவர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் பலி; 3 பேர் காயம்


இச்சம்பவம் காஷ்மீரி கேட் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை 5.45 மணியளவில் வேகமாக காரை ஓட்டிவந்த டீன் ஏஜ் சிறுவன், கட்டுப்பாட்டை இழந்து, அங்கு சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நபர்கள் மீது காரை ஏற்றியுள்ளான். இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

டீன் ஏஜ் சிறுவனை கைது செய்த போலீசார், அவனது காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாகக் கூறிய அவர்கள், சிறுவன் பற்றிய விவரம் எதையும் தெரிவிக்கவில்லை.

A man sleeping on a footpath was killed and three others were critically injured after they were mowed down by a speeding I 20 car near Kashmere Gate ISBT on Thursday morning.

அடுத்த செய்தி