ஆப்நகரம்

நாட்டில் ஒரே ரேஷன் கார்டு... டிமிக்கி கொடுத்த நெட்டிசன்கள்!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு கொடுக்கப்படும் என பரவிய செய்தி...

Samayam Tamil 5 Feb 2020, 10:33 pm
ரேஷன் அட்டைத் திட்டம் கொண்டுவரப்படுகிறது என மத்திய அரசு அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் அட்டைகளைக் கொண்டு எந்தவொரு ரேஷன் கடையிலும் வாங்கிக்கொள்ளலாம் என்பதே.
Samayam Tamil slider-5


தற்போதைய நிலையில் மக்கள் தாங்கள் வாழும் இடத்துக்கு அருகில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டுமே பொருட்களை வாங்க முடியும் என்ற நிலை மாற்றப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ள நிலையில் இந்த திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

குறிப்பாக இந்த திட்டம் குறிப்பிட்ட மக்களின் வளர்ச்சியை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது எனத் திராவிடம் பேசுபவர்களால் குற்றம்சாட்டப்பட்டது. எனினும் அதுகுறித்து மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. நாட்டில் 12 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டத்தைச் செயல்படுத்தி விட்டதாக மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மத்திய அரசின் இந்த திட்டம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவியது.

Fact Check :தலித் பெண் தாக்கப்பட்டாரா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பின்னணி.!

பெரியளவில் பரவலாகப் பேசப்பட்ட விவகாரம் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என்ற பேச்சுதான். மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலத்தவரும் பயன்பெறப் பழைய அட்டைகள் ரத்து செய்யப்பட்டு புதிய அட்டைகள் அச்சிடப்பட்டுத் தரப்படும் என செய்தி பரவியது.

இந்த செய்தி அரசின் கவனத்திற்குச் சென்றது. அரசு ஊடக, தகவல் துறை இந்த செய்தி குறித்து அரசு தரப்பில் விளக்கம் கேட்டுப் பொய் என்பதைக் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தட்ட துறையின் ட்விட்டர் பதிவில் இந்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது.


அந்த ட்விட்டர் பதிவில் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் பழைய ரேஷன் அட்டைகளுக்குப் பதிலாக புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்படும் என் பொய்யான செய்தி பரவி வந்தது.

Fact Check: ஷாஹீன் பாக் போராட்டக்களத்தில் புர்கா அணிந்து நடனமாடும் பெண்கள்... வீடியோ உண்மையா? பரப்பியது யார்?

உண்மையில், பழைய ரேஷன் அட்டைகள்தான் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தின் கீழ் புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்குவதாகத் திட்டம் ஏதுமில்லை என அந்த ட்விட்டரில் கூறப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி