ஆப்நகரம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்; காவலர் வீரமரணம்!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், காவலர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

TNN 9 Sep 2017, 8:07 pm
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், காவலர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.
Samayam Tamil one policeman killed 2 injured in jammu
காஷ்மீரில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்; காவலர் வீரமரணம்!


ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் காவலர் குழுக்கள் நின்றிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் காவலர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 காவலர்கள் படுகாயமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்ட இடத்திற்கு அருகே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

#Visuals: 1 policeman killed,2 injured in J&K's Anantnag terrorist attack. Incident took place 500 yards from venue of HM's meeting tomorrow pic.twitter.com/tpbPN7TjrE— ANI (@ANI) September 9, 2017 இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

One policeman killed, 2 injured in J&K's Anantnag terrorist attack.

அடுத்த செய்தி