ஆப்நகரம்

10ஆம் வகுப்பு ஆன்லைன் வகுப்புகள் இன்றே கடைசி - வெளியான முக்கிய உத்தரவு

ஆன்லைன் வகுப்புகள் முடிவுக்கு வருவதை ஒட்டி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 17 Jan 2021, 4:20 pm
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. எனவே மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்பட்டது. அதாவது KITE மூலம் விக்டர்ஸ் கல்வி சேனலில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் நேரலையில் பாடம் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து ஏழரை மாதங்களாக பல்வேறு பாடங்கள் குறித்து ஆன்லைனில் விளக்கப்பட்டது. மாணவர்களின் சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டன.
Samayam Tamil Online Classes


இந்நிலையில் இன்றுடன் 10ஆம் வகுப்பிற்கான நேரலை வகுப்புகள் முடிவுக்கு வருவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 1,166 டிஜிட்டல் வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டுள்ளன. இனிமேல் அரசின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோக்கள் மூலம் மாணவர்கள் கற்க முடியும் என்று அரசு கூறியுள்ளது. இந்த பாடங்கள் தமிழ், கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

திருப்பதியில் கொட்டிய 50 லட்ச ரூபாய்; தேவஸ்தான நிர்வாகம் செம ஹேப்பி!
இனி www.firstbell.kite.kerala.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேவையான பாடங்களை கற்கலாம் என்று KITE தலைமை செயல் அதிகாரி அன்வர் சடாத் தெரிவித்துள்ளார். மேலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் வகுப்புகள் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் விக்டர்ஸ் சேனல் மூலம் தொடங்கும்.

இது ஒன்றரை மணி நேரம் நீடிக்கும். இதன்மூலம் பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் நன்றாக தயார் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கேரள மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் விஜய் சேதுபதி சொன்னது மாதிரியே நடந்துடுச்சே
இதையொட்டி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சூழலில் வரும் மார்ச் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி