ஆப்நகரம்

PM Modi: மோடி தான் அடுத்த முறையும் பிரதமர்! - கருத்துக் கணிப்பால் எதிர்கட்சிகள் பீதி

மீண்டும் பிரதமராக மோடி வருவார் என்ற கருத்துக் கணிப்பால் எதிர்கட்சிகள் கடுப்படைந்துள்ளனர்.

Samayam Tamil 2 Nov 2018, 7:46 pm
புதுடெல்லி : இணையதளத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராவார் என தெரிவித்துள்ளது.
Samayam Tamil modi


அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற உள்ளது. இதற்கான வேலைகளை கட்சிகள் இப்போதே ஆரம்பித்து விட்டன. யார், யாருடன் கூட்டணி சேரப்போகிறார்கள் என்ற விவாதம் வலுத்துவரும் நிலையில், முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

தேர்தல் வரும் போது கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுவது வழக்கம் தான் என்றாலும், அந்த கருத்துக் கணிப்புகள் மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைவது உண்டு.

மோடிக்கு மீண்டும் வாய்ப்பு :
அடுத்த பிரதமருக்கான வாய்ப்பு யாருக்கு, தற்போதுள்ள பிரதமர் மோடியின் ஆட்சி எப்படி என பல கேள்விகளுடன் “டெய்லி ஹண்ட் மற்றும் நீல்சென் இந்தியா” நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது.

இதில் வெளியான முடிவில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்கு ஆண்டு ஆட்சி தொடர்பாக 63% பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும், பிரதமர் மோடி அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என 50% மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதில், “இரண்டாவது முறையாக மோடி பிரதமரானால், தங்களின் எதிர்காலம் பிரகாசமடையும்.” என பலர் குறிப்பிட்டுள்ளனர்.

காங்கிரஸ் கருத்து :இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இந்த கருத்துக் கணிப்பு பெய்யான தகவல் என்றும் இது வீண் வேலை என்றும் நிராகரித்துள்ளது.

அடுத்த செய்தி