ஆப்நகரம்

நீங்க சரியா கை கழுவுறிங்களா? இதை படிங்க!

இந்தியாவில் 35.8 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே உணவுக்கு முன் முறையாக சோப் போட்டு கை கழுவுவதாக அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 26 Mar 2020, 5:52 pm
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க முதன்மையான வழி மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுதலும் சரீர விலகலும் ஆகும். அதற்கு அடுத்தபடியாக கைகளை சுத்தமாக கழுவி தனிநபர் சுகாதாரத்தை பாதுகாப்பது அவசியமாகும். இந்தியாவில் எத்தனை பேர் தங்களது கைகளை முறையே கழுவி சுத்தமாக வைத்திருக்கின்றனர்?
Samayam Tamil நீங்க சரியா கை கழுவுறிங்களா இதை படிங்க


2019ஆம் ஆண்டில் தேசிய மாதிரி அலுவலகம் நடத்திய ஆய்வின் 76ஆவது அறிக்கையில், இந்திய குடும்பங்களில் 35.8 விழுக்காடு மட்டுமே உணவுக்கு முன் சோப் போட்டு கழுவுவதாகவும், 60 விழுக்காடு குடும்பங்கள் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தி கை கழுவுவதாகவும் தெரியவந்துள்ளது. .இந்தியவின் கிராமப்புற குடும்பங்களில் 25.3 விழுக்காடு மட்டுமே உணவுக்கு முன்பு சோப் போட்டு கை கழுவுவதாக தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களை பொறுத்தவரையில் 56 விழுக்காடு குடும்பங்கள் உணவுக்கு முன் சோப் போட்டு கழுவுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் 2.7 விழுக்காடு குடும்பங்கள் சாம்பல், மணல், சேற்றை பயன்படுத்தி உணவுக்கு முன் கை கழுவுவதாக இந்த அறிக்கை கூறுகிறது. கிராமப்புறங்களில் 70 விழுக்காடு மக்கள் உனவுக்கு முன்பு சோப் இல்லாமல் தண்ணீரை மட்டும் பயன்படுத்தி கை கழுவுகின்றனர். நகர்ப்புறங்களிலோ 42 விழுக்காட்டினர் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி கை கழுவுகின்றனர். இந்தியாவில் 26 விழுக்காட்டினர் மலம் கழித்தபின்னர் சோப் போட்டு கை கழுவுவதில்லை என இந்த அறிக்கை கூறுகிறது.

13.4 குடும்பங்கள் (கிராமப்புறங்களில் 1.2 விழுக்காடு, நகர்ப்புறங்களில் 9.8 விழுக்காடு) மலம் கழித்தபின்னர் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி கை கழுவுவதாக இந்த ஆய்வில் தெரியவருகிறது. இந்தியாவிலுள்ள கழிவறைகளில் மூன்றில் இரண்டு பங்கு கழிவறைகளிலோ, அவற்றைச் சுற்றியோ தண்ணீரும், சோப்பும் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. குடிநீர், தூய்மை, சுகாதாரம் பற்றி ஆய்வு செய்வதற்காக 2019ஆம் ஆண்டில் மத்திய புள்ளியியல் அமைச்சகம் இந்த ஆய்வை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் 35.8 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே முறையாக சோப் போட்டு கை கழுவுவதாக அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி