ஆப்நகரம்

முடி வெட்டலாம் ஆனால் ஷேவிங் கிடையாது..!

பொது முடக்கத்தை மத்திய அரசு நீட்டித்துள்ள நிலையில், 4ஆம் கட்ட பொது முடக்கத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கேரள அரசு இறுதி செய்து வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 18 May 2020, 4:55 pm
திருவனந்தபுரம்: நான்காம் கட்ட பொது முடக்கத்துக்கான வழிகாட்டுதல்களை கேரள அரசு இறுதி செய்து வெளியிட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்பை அடிப்படையாக கொண்டு பல்வேறு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர, ஏணைய பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

நோய்த்தொற்றின் தீவிரத்துக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான முடிவுகளை எடுத்துக் கொள்ள மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நான்காம் கட்ட பொது முடக்கத்துக்கான வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன.

பொதுமுடக்கம் மே 31 வரை நீட்டிப்பு: மத்திய அரசு மீண்டும் அதிரடி!!

அந்த வகையில், நான்காம் கட்ட பொது முடக்கத்துக்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்வதற்கான மதிப்பீட்டு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கேரள அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரள மாநிலத்தில் மதுக்கடைகள் வருகிற புதன்கிழமை முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரள அரசு நடத்தும் Kerala Beverages Corporation Limited நிறுவனத்தின் மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு வரிசை முறை கடைபிடிக்கப்படும் எனவும், தனியார் பார், பீர், வைன் பார்லர்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கேரளாவில் சலூன் கடைகள் இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முடி வெட்ட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஷேவிங், ஃபேசியல் போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. Beauty parlour களுக்கும் அனுமதி இல்லை.

இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா, புதுச்சேரி; பேருந்துகளை இயக்க முடிவு!

நான்காம் கட்ட பொது முடக்கத்தின் போது பள்ளி, கல்லூரிகள் இயங்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. எனவே, கேரளாவில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கொரோனா அதிகம் இல்லாத பகுதிகளில் மட்டும் பேருந்து சேவையை இயக்க முடிவெடுத்துள்ள கேரள அரசு, மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை இயக்கப்படும் எனவும், மாவட்டம், மாநிலத்தை விட்டு பேருந்துகள் இயக்கத்திற்கான தடை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி