ஆப்நகரம்

நம்பர் தான் குறைஞ்சிருக்கா; கொரோனா அப்படியே தான் இருக்கா? அதிரவைக்கும் பின்னணி!

கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வில் பாதிப்பு தொடர்பான எண்ணிக்கையில் குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 5 Nov 2020, 5:35 pm
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்தகட்ட தளர்வுகள் குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு, பொது இடங்களில் பொதுமக்களை அனுமதிப்பது உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொடர்பான எண்ணிக்கையில் குழப்பங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது கர்நாடக மாநிலத்தின் உண்மை நிலவரத்தைக் காட்டவில்லை. இதற்கு குறைவான எண்ணிக்கையில் செய்யப்பட்ட பரிசோதனைகள், தரம் குறைந்த பரிசோதனைகள் ஆகியவையே காரணம் என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜீவன் ரக்‌ஷா ப்ரோஜக்ட் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
Samayam Tamil Coronavirus in Bangalore


அதில் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு நிலவரம் மற்றும் ஐந்து முக்கிய நகரங்களில் கோவிட்-19 தொற்று ஆகியவற்றைக் கருத்தில் எடுத்துக் கொண்டது. அவற்றில் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் அடங்கும். இதுபற்றி ஜீவன் ரக்‌ஷா திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ் மைசூர் கூறுகையில், பெங்களூருவில் தற்போது வரை 29.6 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்று நாள்களில் 180 ஆசிரியர்களுக்கு கொரோனா: பகீர் ரிப்போர்ட்!

இதில் 20 சதவீதம் மறுபரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கை ஆகும். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்று பரவும் விகிதம் 11.4 சதவீதத்திலேயே இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி, நோய்த்தொற்று பரவும் விகிதம் 5 சதவீதமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து 14 நாட்கள் மிகக் குறைந்த அளவில் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் தான் தளர்வுகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஆனால் பெங்களூருவின் நிலை வேறாக இருக்கிறது என்று தெரிவித்தார். அக்டோபர் மாதத்தில் புதிய பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு காரணம், கடந்த செப்டம்பரில் அதிகப்படியான பரிசோதனைகள் செய்ததே ஆகும். கடந்த மாதம் கொரோனா பலி விகிதம் 43 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு செப்டம்பரில் மிகத் தீவிரமாக பரிசோதனைகள் மேற்கொண்டதே காரணம்.

இதன்மூலம் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் கண்டறியப்பட்டு உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். வைரஸ் மேலும் பரவாமல் பெரிதும் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் 65,664 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தனர். அடுத்த இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கை 34,459ஆக குறைந்துள்ளது. இதன் பின்னணியில் தரம் குறைந்த பரிசோதனைகள் முக்கிய காரணமாக இருந்துள்ளன.

ஒருபக்கம் ஹேப்பி; மறுபக்கம் பெரிய ஷாக் - ஆட்டம் காட்டும் கொரோனா வைரஸ்!

அதாவது மொத்த பரிசோதனைகளில் 40 சதவீதம் தவறான முடிவுகளை அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசு தவறிவிட்டது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி