ஆப்நகரம்

மத்திய அரசை கழுவி ஊற்றிய எதிர்க்கட்சிகள்!

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 4 Feb 2021, 11:30 pm
விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Samayam Tamil Rajya sabha session


இன்று ராஜ்ய சபாவில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் பேசியபோது, “விவசாயிகள் மீது தடியடி நடத்தப்படுவது மட்டுமல்லாமல் அவர்களை தேச விரோதிகள் எனவும், தீவிரவாதிகள் எனவும் அழைக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு.. என்ன செய்யப்போகிறார் மோடி?
11 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. எல்லாமே தோல்வியில் முடிந்துவிட்டது. விவசாயிகளை அரசு கண்டுகொள்வதில்லை. கருணை உள்ளம் கொண்டு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் பேசியபோது, “வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. பிரதமர் மோடி விவசாயிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டார். பாரதிய கிசான் சங்கமும் அரசியல் ரீதியாக ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புகொண்டதாக இருக்கிறது” என்று கூறினார்.

வழக்கு போட்டாலும் விவசாயிகளுக்கு துணை நிற்பேன்: துணிச்சல் சிறுமி கிரெட்டா!
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான டெரக் ஓபிரயன், “மத்திய அரசின் திமிரால் நாடாளுமன்றத்தின் புனிதமே கெட்டுவிட்டது. பல நிலைகளிலும் நமது நாட்டை தோல்வியடையச் செய்துவிட்டது இந்த அரசு” என்று குற்றம்சாட்டினார்.

மக்களவையிலும் அரசு மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோஷமிட்டனர். எம்.பிக்கள் அமைதியாக இருக்கைகளுக்கு திரும்பும்படி சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். அவரது அறிவுறுத்தலை எதிர்க்கட்சி தலைவர்கள் நிராகரித்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி