ஆப்நகரம்

ஹலோ ராகுல்; அப்புறம் தலைவர் ஆகுறேனு சொன்னீங்க; ஆளயே காணோம்; நக்கல் செய்யும் யோகி!

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் எங்கள் பணி எளிமையடையும் என்று உ.பி., முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

TNN 22 Nov 2017, 6:53 am
கோரக்பூர்: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் எங்கள் பணி எளிமையடையும் என்று உ.பி., முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil our job is easy when rahul gandhi becomes congress leader says yogi
ஹலோ ராகுல்; அப்புறம் தலைவர் ஆகுறேனு சொன்னீங்க; ஆளயே காணோம்; நக்கல் செய்யும் யோகி!


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி உள்ளார். இவருக்கு கடந்த ஓராண்டாகவே தொடர் உடல்நலக்குறைபாடுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இதனால் கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்பதை குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் அக்கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் சூடு பிடிக்கும் என்றும், இழந்த செல்வாக்கை திரும்ப பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராகுலை கிண்டலடிக்கும் வகையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். அதாவது, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே தங்கள் நோக்கம்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்கும் பட்சத்தில், இது எங்களுக்கு எளிதாகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். நாங்கள் எந்தவித சிரமும் மேற்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

Our job is easy when Rahul Gandhi becomes Congress leader says Yogi.

அடுத்த செய்தி