ஆப்நகரம்

ஒரே நாளில் லட்சாதிபதி ஆன விவசாயிகள்!

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அளித்த இழப்பீடு தொகையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒரே நாளில் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர்.

Samayam Tamil 29 May 2018, 4:08 pm
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அளித்த இழப்பீடு தொகையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒரே நாளில் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர்.
Samayam Tamil road-02_052818082723.


மகாராஷ்டர மாநிலத்தில் 5,44,517 ஹெக்டேர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதில், 69,905 ஹெக்டேர் நிலத்தை 13 கிராமங்களிலிருந்து மட்டுமே பெற்றிருக்கிறது. இதற்கு இழப்பீடாக அவற்றின் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு மொத்தம் 79,157,590 ரூபாய் வழங்கியுள்ளது.

இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். குறிப்பாக மாரத்வாடாவில் உள்ள ஹட்கோன் கிராமத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். அங்கு இந் இழப்பீட்டைப் பெற்ற அனைத்து விவசாயிகளும் லட்சாதிபதியாக மாறியிருக்கிறார்கள்.

ஆனால், சில விவசாயிகளுக்கு நிலம் தொடர்பான சில விவகாரங்களால் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு கையகப்பட்டுத்தியுள்ள இந்த நிலப்பரப்பு துல்ஜாபூர் – நாக்பூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை அமைக்க பயன்படுத்தப்பட உள்ளது. 7 இச்சாலை கிராமங்களின் குறுக்காக அமைய உள்ளது.

அடுத்த செய்தி