ஆப்நகரம்

இந்தியாவில் சொகுசு கப்பல்களை இயக்க அதானி போடும் பிளான்!

இந்தியாவில் சொகுசு கப்பல்களை இயக்க அதானி உள்பட 80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 15 Jan 2021, 9:54 am
இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு சொகுசு கப்பல்களை இயக்க அதானி உள்பட பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Cruise (Representational image)


இந்தியாவில் சொகுசு கப்பல்களை (Cruise) இயக்க அதானி, ஷ்ரேயஸ் ஷிப்பிங், அங்ரியா குரூஸ், சமுத்ரா மெரைன், எஸ்குயர் ஷிப்பிங் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

இந்தியாவில் இருந்து இலங்கை, வங்கதேசம், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணப் படகுகளை (ferry) இயக்க சாகர்மாலா வளர்ச்சிக் கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

கோழிக் கறி, முட்டைக்கு முழு தடை.. மாநில அரசு அதிரடி!
காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் வரையிலும், விசாகபட்டிணம் மற்றும் கொல்கத்தாவில் இருந்து வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் வரையிலும் பயணப் படகுகளை இயக்க சில நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

சர்வதேச தலங்களுக்கு பயணப் படகுகளை இயக்க இந்தியா முழுக்க பல்வேறு இடங்களையும், ஆறு சர்வதேச வழித்தடங்களையும் சாகர்மாலா வளர்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது. சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் கடல்விமான சேவைகளை தொடங்க சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி