ஆப்நகரம்

யோகியின் ஆக்ஷன் அரசியல்: 9 மாதங்களில் 920 என்கவுண்டர்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி அரசின் 9 மாத ஆட்சியில் 31 தாதாக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 11 Jan 2018, 8:14 pm
உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி அரசின் 9 மாத ஆட்சியில் 31 தாதாக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Samayam Tamil over 900 encounters in yogi adityanath regime 31 goons gunned down
யோகியின் ஆக்ஷன் அரசியல்: 9 மாதங்களில் 920 என்கவுண்டர்!


உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி அரசு பொறுப்பேற்ற 9 மாதங்களில் (ஜனவரி 10ஆம் தேதி வரை) 920 என்கவுண்டர்கள் நடந்துள்ளன என்றும் அதில் 31 தாதாக்கள் கொல்லப்பட்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 196 குற்றவாளிகளும் 212 போலீசாரும் காயமடைந்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பாக அம்மாநில காவல்துறை தினத்தை ஒட்டி வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில் கடந்த செப்டம்பர் 1, 2016 முதல் ஆகஸ்ட் 31, 2017 வரையான ஓராண்டில் 543 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

யோகி அரசின் என்கவுண்டர் மேளா! 22 குண்டாஸ் காலி!

அடுத்த செய்தி