ஆப்நகரம்

கடந்த 4 ஆண்டுகளில் 73 ஆயிரம் திருநங்கைகள் கைது- எதற்காக?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட, திருநங்கைகள் மீதான குற்ற வழக்கு தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Apr 2019, 11:26 pm
கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில் பயணிகளிடம் பணம் பறித்த விவகாரங்களில் 73 ஆயிரம் திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறையிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ரயிலில்  பணம் பறிப்பு: கடந்த 4 ஆண்டுகளில்  73,000 திருநங்கைகள் கைது
ரயிலில் பணம் பறிப்பு: கடந்த 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது!


ரயிலில் பயணிகள் செய்யும் பலரும், திருநங்கைகளால் பிரச்னை ஏற்படுவதாகவும் அவர்கள் பணத்தை வலுக்கட்டாயமாக பறித்துவிடுவதாக பலரும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில் கொடுத்துள்ளது.

அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் ரயில் பயணிகளிடம் வலுக்கட்டாயமான முறையில் பணம் பறித்த புகாரில் இதுவரை 73 ஆயிரம் திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவிர, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20 ஆயிரம் திருநங்கைகள் இதே புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்தவர்கள், சமூகத்தால் திருநங்கைகளுக்கு ஏற்படும் புறக்கணிப்பின் காரணமாகவே அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்.

திருநங்கைகள் குறித்த பொதுப்பார்வையை மக்களிடத்தில் மாற்றினால் இந்த சிக்கலுக்கு எளிதாக தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி