ஆப்நகரம்

ப.சிதம்பரம் ஜாமீன் மனு: சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது

Samayam Tamil 4 Oct 2019, 1:25 pm
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil chidambaram


ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி டெல்லியில் உள்ள வீட்டில் வைத்து ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை தொடர்ந்து நிராகரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், நேற்றைய விசாரனையின் போது அவரது நீதிமன்ற காவலை வருகிற 17ஆம் தேதி நீட்டித்து உத்தர்விட்டுள்ளது.

முன்னதாக, தனக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அவமானப்படுத்தும் நோக்கில் தான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்றக் காவலில் நீண்ட காலம் வைத்திருப்பது சரியானதா என ஆய்வு செய்து ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக வருகிற 15ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டு அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

அடுத்த செய்தி