ஆப்நகரம்

ப.சிதம்பரத்தை இப்படி வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி அதிரடி டுவிட்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது சரியான செயல் அல்ல என்று பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 21 Aug 2019, 10:52 am
கடந்த 2007ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு, அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று தருவதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இதற்கு அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடந்தையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Samayam Tamil Priyanka Gandhi


இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் தொடர்ந்து முன் ஜாமீன் பெற்று வந்த நிலையில், நேற்று அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Also Read: 24 மணி நேரத்தில் 4வது முறை ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள்!

இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைக்க, நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றிருந்தனர். ஆனால் அவர் இல்லாத காரணத்தால் திரும்பிச் சென்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 4 முறை ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். ஆனால் ப.சிதம்பரம் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பிரியங்கா காந்தி டுவிட் போட்டுள்ளார்.

Also Read: ப. சிதம்பரம் கைதா? இன்னும் கொஞ்சம் நேரத்தில் தெரிந்துவிடும்!!

அதில், மாநிலங்களவையின் மிகவும் தகுதி வாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய உறுப்பினராக ப.சிதம்பரம் திகழ்கிறார். இவர் நாட்டிற்காக மிகுந்த நேர்மையுடன் நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.

எந்தவித தயக்கமும் இன்றி, தைரியமாக உண்மைகளை பேசக்கூடியவர். தற்போதைய அரசின் தோல்விகளை பளிச்சென்று அம்பலப்படுத்தியவர். இப்படிப்பட்ட நபரை வெட்கமின்றி வேட்டையாட நினைக்கின்றனர்.

Also Read: கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்? ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

அவருக்கு நாங்கள் துணை நிற்போம். உண்மைக்காக தொடர்ந்து போராடுவோம். அது எத்தகைய விளைவுகளை அளித்தாலும் சரி. கவலைப்படப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி