ஆப்நகரம்

ஓடி, ஒளியும் ப.சிதம்பரம்; விடாமல் துரத்தும் சிபிஐ - சுப்பிரமணியன் சுவாமி டுவிட்!

ப.சிதம்பரம் வழக்கில் இருந்து தப்பிக்க ஓடி, ஒளியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி டுவிட் போட்டுள்ளார்.

Samayam Tamil 21 Aug 2019, 12:24 pm
பாரதிய ஜனதா கட்சியில் எப்போதும் சர்ச்சை நாயகனாக இருந்து வருபவர் சுப்பிரமணியன் சுவாமி. இவர் பிற கட்சி தலைவர்களை வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
Samayam Tamil Subramanian Swamy


ஊழல் வழக்குகளைத் தேடிப் பிடித்து வழக்கு தொடர்பவராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ப.சிதம்பரம் விவகாரத்தில் தற்போது கருத்து தெரிவித்து டுவிட் போட்டுள்ளார்.

Also Read: முன் ஜாமீன் மனு உடனடியாக விசாரிக்க மறுப்பு- ப.சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!

கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வரும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு, மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. நீதிமன்றத்தில் தொடர்ந்து முன் ஜாமீன் பெற்று வந்த நிலையில், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரிக்க, சிபிஐ அதிகாரிகள் 4 முறை டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை.

Also Read: ப.சிதம்பரத்தை இப்படி வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி அதிரடி டுவிட்!

நான்கு முறை மத்திய நிதியமைச்சர், ஒருமுறை உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்திருக்கிறார். இவர் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தலைமறைவாக இருப்பது சரியா? என்று பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஓடி ஒளிந்து கொண்டார் ப.சிதம்பரம் என்ற வகையில் டுவிட் போட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: 24 மணி நேரத்தில் 4வது முறை ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள்!

அடுத்த செய்தி