ஆப்நகரம்

பணத்தட்டுப்பாடு எதிரொலி: கல்விக்கு நெல் மூட்டைகளை கட்டணமாக கொடுத்த விவசாயிகள்

பணத்தட்டுப்பாடு எதிரொலி காரணமாக, கல்விக்கு நெல் மூட்டைகளை விவசாயிகள் கட்டணமாக கொடுத்துள்ளனர்.

TNN 25 Dec 2016, 1:01 pm
குவாலியர்: பணத்தட்டுப்பாடு எதிரொலி காரணமாக, கல்விக்கு நெல் மூட்டைகளை விவசாயிகள் கட்டணமாக கொடுத்துள்ளனர்.
Samayam Tamil paddy gunny is the fees for education because of cash shortage
பணத்தட்டுப்பாடு எதிரொலி: கல்விக்கு நெல் மூட்டைகளை கட்டணமாக கொடுத்த விவசாயிகள்


கடந்த மாதம் 8ஆம் தேதி, ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் மத்திய அரசு அதிரடியான முடிவுகளை வெளியிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு உருவானது. வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில், இன்றும் இந்த நிலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் பிரதர்வார் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை கட்ட முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து பணத்திற்கு பதிலாக நெல் மூட்டைகளை கட்டணமாக பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நெல் மூட்டைகள், அருகிலிருந்த மண்டியில் விற்பனை செய்து, கல்வி கட்டணத்தை எடுத்துக் கொண்டனர். கல்விக்காக தங்களின் அடிப்படை தேவைகளையே அர்ப்பணிக்கும் அளவிற்கு மிகவும் மோசமான நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Paddy gunny is the fees for education because of cash shortage.

அடுத்த செய்தி