ஆப்நகரம்

பத்ம விருதுகள் வழங்கும் விழா இப்போ கிடையாது... ஏன்?

பதம் விருதுகள் வழங்கும் விழா திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏனெனில்,

Samayam Tamil 14 Mar 2020, 9:29 pm
இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கும் விழா டெல்லி ராஷ்டிரபதி பவனில் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது.
Samayam Tamil padma awards ceremony postponed due to corona
பத்ம விருதுகள் வழங்கும் விழா இப்போ கிடையாது... ஏன்?


ஆனால், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 87 ஆக உயர்ந்து உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பொதுமக்களுக்கு அந்தந்த அரசுத் தரப்பிலிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.



இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற ஏப்ரல் 3ந்தேதி நடைபெற திட்டமிட்டிருந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த விழா நடைபெறும் நாள் மற்றும் நேரம் பற்றி பின்னர் அறிவிப்பு வெளியாகும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி