ஆப்நகரம்

பத்மாவதி படம் ராஜ்புத் தலைவர்களுக்கு திரையிட்ட பிறகே வெளியிடப்படும்: பாஜக உறுதி

சர்ச்சைக்குரிய இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் பத்மாவதி படத்தை, ராஜ்புத் இனத் தலைவர்களுக்கு திரையிட்டுக் காட்டிய பிறகே, ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என்று, பாஜக கூறியுள்ளது.

TNN 4 Mar 2017, 9:56 pm
சர்ச்சைக்குரிய இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் பத்மாவதி படத்தை, ராஜ்புத் இனத் தலைவர்களுக்கு திரையிட்டுக் காட்டிய பிறகே, ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என்று, பாஜக கூறியுள்ளது.
Samayam Tamil padmavati wont be released till shown to rajput leaders bjp
பத்மாவதி படம் ராஜ்புத் தலைவர்களுக்கு திரையிட்ட பிறகே வெளியிடப்படும்: பாஜக உறுதி


பிரபல இந்தி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி பத்மாவதி என்ற பெயரில் வரலாற்று கதை கொண்ட படம் ஒன்றை இயக்கிவருகிறார். ராஜபுத்திர ராணியான பத்மாவதியை, முஸ்லீம் அரசர் அலாவுதீன் கில்ஜி திருமணம் செய்வதைப் போன்ற கதையை கொண்டதாக இந்த படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதன்பேரில், அண்மையில் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடந்தபோது, சஞ்சய் லீலா பன்சாலியை ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த சில அமைப்பினர் தாக்கி, வெளியேறும்படி எச்சரித்தனர். எனினும், தொடர்ந்து அந்த படத்தின் படப்பிடிப்பை, சஞ்சய் லீலா பன்சாலி நடத்திவருகிறார்.

கூடிய விரைவில் இந்த படம் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதனை தடை செய்யும்படி, ராஜஸ்தானில் பரவலாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ராஜஸ்தான் மாநில எரிசக்தித்துறை அமைச்சர் புஷ்பேந்திர சிங், ராஜ்புத் இனத்தவர்களுக்கு, திரையிட்டு காட்டிய பிறகே, பத்மாவதி படம் வெளியிடப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இவர், பாஜக.,வின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். இதன்மூலமாக, பத்மாவதி திரைப்படம் அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Addressing a protest organised by Savarna Adhikar Aarakshan Manch near the assembly building here, Energy Minister Pushpendra Singh assured a section of the Rajput community that the film will not be released in the state.

அடுத்த செய்தி