ஆப்நகரம்

பாகிஸ்தான் சிறையில் இருந்த 86 இந்திய மீனவர்கள் விடுதலை

பாகிஸ்தானில் உள்ள கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 86 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.

TNN 20 Mar 2016, 6:45 pm
கராச்சி: பாகிஸ்தானில் உள்ள கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 86 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.
Samayam Tamil pak govt releases indian fisherman
பாகிஸ்தான் சிறையில் இருந்த 86 இந்திய மீனவர்கள் விடுதலை


மஹாராஸ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் கராச்சி சிறையில் உள்ள 86 இந்திய மீனவர்களை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் கராச்சியில் இருந்து லாகூர் வழியாக வாகா எல்லை பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

முன்னதாக கடந்த மார்ச் 6 ஆம் தேதி பாகிஸ்தான் அரசு , இந்திய மீனவர்கள் 86 பேரை விடுதலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி