ஆப்நகரம்

புர்ஹான் வானி சுட்டுக் கொலை: பாக்., பிரதமர் அதிர்ச்சி

புர்ஹான் வானி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அதிர்ச்சி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 11 Jul 2016, 4:26 pm
இஸ்லாமாபாத்: புர்ஹான் வானி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அதிர்ச்சி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil pak pm expresses deep shock at killing of burhan wani
புர்ஹான் வானி சுட்டுக் கொலை: பாக்., பிரதமர் அதிர்ச்சி


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் பகுதியில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஹிஜ்புல் முஜாஹிதீன் கமாண்டர் புர்ஹான் வானி உள்பட தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அதனையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தால், மூன்றாவது நாளாக அங்கு இன்றும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்த கலவரத்தில் சிக்கி பாதுகாப்பு படையினர் உள்பட சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீவிரவாதி புர்ஹான் வானி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அதிர்ச்சி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், புர்ஹான் வானி கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்க, பொதுமக்கள் மீது இந்திய அரசு அதிகப்படியான, சட்டத்திற்கு புறம்பான படைகளை உபயோகிக்கிறது வருத்தமளிப்பதாகவும் நவாஸ் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் கட்டுப்பாட்டை இந்திய அரசு மீறக் கூடாது என்று தெரிவித்துள்ள நவாஸ், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களிலுள்ள உறுதிப்பாடுகளின் படி செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி