ஆப்நகரம்

காஷ்மீர் வன்முறைக்கு பின்னணியில் பாகிஸ்தான் - ராஜ்நாத் சிங்

ஜம்மு காஷ்மீர் புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 21 Jul 2016, 5:42 pm
டெல்லி: ஜம்மு காஷ்மீர் புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil pakistan behind kashmir attack says rajnath singh
காஷ்மீர் வன்முறைக்கு பின்னணியில் பாகிஸ்தான் - ராஜ்நாத் சிங்


ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி புர்ஹான் வானி உட்பட மூன்று பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.

இதில் 40க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த வன்முறை சம்பவம் குறித்து மக்களவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் வன்முறை சம்பவங்களுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் தீவிரவாத இயக்கத்தின் தளபதியை தியாகியாக சித்தரிப்பது, வேதனையளிப்பதாக குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், அந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். இதற்கிடையில் காஷ்மீர் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய அவர், இந்த செயல்பாடு தற்போதைய சூழலில் பொருத்தமற்றது என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி