ஆப்நகரம்

காஷ்மீர் பிரச்னைக்கு பாகிஸ்தானே காரணம்: ராஜ்நாத் சிங்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவும் மோசமான சூழலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 10 Aug 2016, 8:54 pm
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவும் மோசமான சூழலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil pakistan is the reason for jammu kashmir issue says rajnath singh
காஷ்மீர் பிரச்னைக்கு பாகிஸ்தானே காரணம்: ராஜ்நாத் சிங்


மாநிலங்களவையில் காஷ்மீர் தொடர்பான விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்து பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீரில் கலவரத்தை மறைமுகமாக பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டினார். காஷ்மீர் விவகாரத்தில் மாநில அரசுடன், மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷமீரில் கலவரக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது பொதுமக்களை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார். காஷ்மீர் கலவரம் தொடர்பாக வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேச்சு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரை நம்மிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது எனவும், பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்களை சகித்துக் கொள்ள முடியாது எனவும் உள்துறை அமைச்சர் கருத்து தெரிவித்தார். மேலும் காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி