ஆப்நகரம்

தசராவின் போது இந்து ஆலயங்களை குண்டு வைத்து தகர்ப்போம்- பயங்கரவாதிகள் அனுப்பிய மிரட்டல் கடிதம்!

இந்தியாவில் தசரா பண்டிகையின்போது மக்கள் அதிகம் திரளும் ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தவிருப்பதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Sep 2019, 1:28 pm
தசரா பண்டிகை அன்று, இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்த போவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெளியிட்ட மிரட்டல் கடிதம் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil தசராவின் போது இந்து ஆலயங்களை குண்டு வைத்து தகர்ப்போம்- பயங்கரவாதிகள் அனுப்பிய மிரட்டல் கடிதம்!
தசராவின் போது இந்து ஆலயங்களை குண்டு வைத்து தகர்ப்போம்- பயங்கரவாதிகள் அனுப்பிய மிரட்டல் கடிதம்!


நாடு முழுவதும் அடுத்த மாதம் நவராத்திரி, தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கர்நாடகாவில் மைசூரிலும், தமிழ்நாட்டில் குலசேகரன் பட்டினத்திலும் தசரா பண்டிகை வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் தசரா பண்டிகையின்போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளும் ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தவிருப்பதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து, ஹரியானா மாநில ரயில்வே போலீசாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், ”எங்கள் இயக்கத்தினரை கொன்றதற்காக பழிக்கு பழி வாங்க முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் உள்ள 12 ரயில் நிலையங்களையும், முக்கிய இந்து ஆலயங்களையும் குண்டு வைத்து தகர்ப்போம். அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவில் தசரா திருவிழா நடைபெறும் போது எங்கள் இலக்கை எட்டுவோம்” என மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஃபரூக் அப்துல்லா எங்கே? பதில் சொல்லுங்க மத்திய அரசே?- உச்சநீதிமன்றம் தடாலடி!

இந்த கடிதம் குறித்து ரோதக் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரேந்திர சிங் கூறுகையில், மும்பை, சென்னை, பெங்களூரு, ரோதக், ரிவாரி, ஹிதர் உள்பட 12 ரயில் நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக பயங்கரவாதிகள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இதனிடையே, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் கடித மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தசரா திருவிழா நடக்கும் முக்கிய ஆலயங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

பண்டிகை கால விற்பனை: டூ-வீலர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்த ஹோண்டா

அண்மையில் தமிழகத்தில் தாக்குதல் நடத்த 6 பயங்கரவாதிகள் கடல் வழியாக கள்ளப்படகு மூலம் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை தகவலை தெரிவித்தது.

இதையடுத்து தமிழக முழுவதும், அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடலோரப் பகுதிகளில் 24 மணி நேரமும் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெளியிட்ட மிரட்டல் கடிதம் நாட்டு மக்களை குலைநடுங்கச் செய்துள்ளது.

இன்று 74வது பிறந்த நாளைக் கொண்டாடும் ப.சிதம்பரத்திற்கு இப்படியொரு சோகம்!

அடுத்த செய்தி