ஆப்நகரம்

நாடாளுமன்றத்தை உருக்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டம்!

இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 31 Dec 2017, 2:10 am
இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil pakistan terror proxies planning sinister attack on parliament
நாடாளுமன்றத்தை உருக்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டம்!


கடந்த 2001ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் சேர்ந்து இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதை விடவும் பயங்கரமான மற்றொரு தாக்குதலை விரைவில் இந்தியா நாடாளுமன்றத்தைக் குறிவைத்து நடத்துவதற்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் திட்டம் தீட்டியுள்ளன என்று புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் முக்கிய வரலாற்றுச் சின்னங்கள், நாடாமன்றக் கட்டிடம், சுற்றுலா வரும் தலங்கள், அதிக மக்கள் கூடும் இடங்கள் என பல இடங்களைக் குறிவைத்துத் தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி